ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குறுங்காடுகள் நர்சரி கார்டனுக்கு மண் எடுப்பதாக கூறி வெளியில் விற்பனை செய்த இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

குறுங்காடுகள் நர்சரி கார்டனுக்கு மண் எடுப்பதாக கூறி வெளியில் விற்பனை செய்த இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட வேந்தோணி கண்மாய் உள்ளது இந்த கண்மாய் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கண்மாயில் உள்ள வரத்து கால்வாய் பகுதியில் அனுமதியில்லாமல் மண் அல்ல படுவதாக கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மண் அல்ல பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்தனர். இந்த தகவல் அறிந்து வந்த எமனேஸ்வரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன், வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் குமரன், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வேந்தோணி மற்றும் உரப்புளி ஊராட்சிகளில் குறுங்காடுகள் திட்டத்திற்கு தேவையான மரங்களை வளர்ப்பதற்கான நர்சரி கார்டன் மாவட்ட ஆட்சியரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது .இந்த கார்டனுக்கு செடிகள் வளர்ப்பதற்காக மண் தேவைப்படுவதாக பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 8, டிப்பர் லாரி மண் எடுத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மணல் லாரி உரிமையாளர்கள் முறைகேடாக 20க்கு மேற்பட்ட டிப்பர் லாரி மண் ரூபாய் 5000, வீதம் விலையில் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அதிகாரிகளின் உத்தரவை மீறி அதிக அளவில் மண் எடுத்ததால் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி குறுங்காடுகள் திட்டத்திற்கு செடிகளை வளர்ப்பதற்கு தேவையான மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது இந்நிலையில் அதைத் தவறாகப் பயன்படுத்தி வெளியில் மண் விற்பனை செய்து வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பரமக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 8, டிப்பர் லரி மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதற்குமேல் எடுத்தால் அதை விற்பனை செய்தால் கட்டாயம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image