அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரமக்குடி எம்எல்ஏ. வாட்ஸ்அப் ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரமக்குடி எம்எல்ஏ. வாட்ஸ்அப் ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்  பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் அவரது மகன் அவரது உதவியாளர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எம்எல்ஏ சதன் பிரபாகரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினரே கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது சாதாரண மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என சதன் பிரபாகர் எம்எல்ஏ கூறினார். இதேபோல் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டவர்களும் எவ்வித அச்சமுமின்றி அரசு மருத்துவமனைகளில் தரமான முறையில் சிகிச்சை பெற்று வந்தால் நோயை விரட்டலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .சாதாரன நோய் ஏற்ப்பட்டாலே பெரிய மருத்துவமனைகளை நாடி செல்லும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் அரசு மருத்துவமனையை நாடி சென்று எம்எல்ஏ சதன் பிரபாகரனின் இந்த செயலை பாராட்டி வாட்ஸ் அப்பிலும் டுவிட்டரிலும் ஏராளமானோர் வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image