கோவை:திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டிக்கவுண்டனூர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக சிலர் நடத்துவதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கோவை:திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டிக்கவுண்டனூர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக சிலர் நடத்துவதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டிக்கவுண்டனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், வேலைசெய்யும் இடத்தில் தங்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், “நாங்கள் ரொட்டிக்கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருகிறோம், எங்களுடைய தேவைக்காக அருகிலுள்ள தோட்ட உரிமையாளர்களிடம் பணம் வாங்கிய நிலையில், தங்களை குடும்பத்துடன் வந்து தோட்டத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டும் எனவும், காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்துகின்றனர். மேலும், பணம் கொடுத்த தோட்ட உரிமையாளர்கள் இரவு நேரங்களில் வந்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, தங்களை அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image