பரமக்குடி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் - நகர் காவல் ஆய்வாளர் திருமலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பரமக்குடி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் - நகர் காவல் ஆய்வாளர் திருமலை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பரமக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பரமக்குடி நகர் காவல்துறை சார்பில் கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்,சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிப்பதுடன் அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் நன்றாக கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பரமக்குடி பஸ் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகளில் காவலர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக நகர் காவல்துறை ஆய்வாளர் திருமலை விழிப்புணர்வு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அமுதா,நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணியம், சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவழகன் உள்பட காவல் துறையினர்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image