தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமையில் நடைபெற்றது

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை தரப்படும் ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு . ஆண்டிபட்டி ,ஜூன் .26 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமையில் நடைபெற்றது .ஒன்றியக்குழு துணைத் தலைவர் வரதராஜன் ,ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள் ,ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர், திமுக 5 பேர், தேமுதிக 2 பேர், காங்கிரஸ் 1, அம முக 2 பேர் உள்ளிட்ட 19 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் ஐம்பது பொருள்களின் மேல் வரவு, செலவுகள் வாசிக்கப்பட்டு ஒன்றியக் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளில் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர் .இது குறித்து பதில் அளித்த ஒன்றியக் குழுத் தலைவர் லோகிராஜன் கூறும்போது ,வரும் காலங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேறும் போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஒன்றிய பொது நிதியிலிருந்து கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் ஒன்றிய கவுன்சிலர்களின் முழு ஒத்துழைப்புடன் கலந்தாலோசித்து வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்து கூறினார். இதனையடுத்து வரவு, செலவு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image