கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பரமக்குடியில் இம்மாதம் 30 ம்தேதி வரை கடையடைப்பு - மிளகாய் நவதானிய வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பரமக்குடியில் இம்மாதம் 30 ம்தேதி வரை கடையடைப்பு - மிளகாய் நவதானிய வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு.  பரமக்குடி மிளகாய் நவதானிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று 25 ம்தேதி முதல் ஒரு வாரம் கடையடைப்பு நடத்துவதென முடிவு செய்யப் பட்டுள்ளது. இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.பி.சூரியமூர்த்தி தலைமையில் நடந்தது.நிர்வாகக் குழு உறுப்பினர் பால் ஆரோக்கியசாமி,இ.முகம்மது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.சாதிக் அலி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பரமக்குடி நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கவும், கிராமங்களில் இருந்து பொதுமக்கள் விளைபொருட்களை விற்பதற்காக பரமக்குடி நகருக்கு வந்து செல்வதை தடுக்கவும் இன்று 25 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை மிளகாய் நவதானிய கடைகளை அடைப்பது என முடிவு செய்யப் பட்டது.மேலும் மொத்த வியாபாரிகள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மிளகாய்,பருத்தி போன்ற விளைபொருட்களை அனுப்புவதை ஒருவார காலம் நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப் பட்டது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது,கைகளை கழுவுவதை பின்பற்ற வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டது


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image