அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரம் - பரமக்குடி கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பரமக்குடி - எமனேசுவரம் அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேசன் சார்பில் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து நெசவாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பரமக்குடி உதவி கைத்தறி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெடரேசன் தலைவர் சேஷய்யன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் நாகநாதன்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குமார்,முருகன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெடரேசன் செயலாளர் கோதண்டராமன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.முகக் கவசம் அணிந்து கலந்து கொண்ட கைத்தறி நெசவாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.பெடரேசன் செயலாளர் ருக்மாங்கதன் நன்றி கூறினார். பின்பு பெடரேசன் சார்பில் உதவி கைத்தறி இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து இக் கோரிக்கையை வலியுறுத்தி 23 ம்தேதி பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பும்,24 ம்தேதி எமனேசுவரம் நேருஜி மைதானம் முன்பும் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image