பரமக்குடியில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா - பெண் ஒருவர் பலி

பரமக்குடியில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா - பெண் ஒருவர் பலி பரமக்குடி, ஜூன்.24: பரமக்குடியில் கொரோனா பாதிப்பால் 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் நேற்று மட்டும்15 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால் பாதிக்கப் பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசார், நகராட்சியினர் தடுப்பு வேலிகள் மூலம் அடைத்து வருகின்றனர். இதனிடையே பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து கடைகளும் நேற்று முதல் இம்மாதம் 30 ம்தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறந்திருக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த ஒரு பெண் வயது 45 என்பவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப் பட்டது.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image