போகலூர் ஊராட்சியில் ரூ 15 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் - ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் அறிவுரை.

பரமக்குடி அருகேயுள்ள போகலூர் ஊராட்சியில் 14 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா நடந்தது. விழாவிற்கு போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து பேசுகையில், கிராம மக்கள் அனைவரும் பயன்படும்படி இந்நிலையம் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ 5 வீதம் எடுத்து பயன் பெறலாம். மேலும் குடிநீரை வீணாக்காமல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி சிக்கனமாக பயன் படுத்தி கொள்ள வேண்டுமென கூறினார். முன்னதாக, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், போகலூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன்,ஒன்றிய கவுன்சிலர் கதிரவன்,ஒன்றிய தி.மு.க. பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பழனி வரவேற்றார். போகலூர் ஊராட்சியின் துணைத் தலைவர் லலிதா கண்ணன்,ஒன்றிய மற்றும் பிரமுகர்கள்,கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image