திருச்சுழியில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் வருவாய்த் துறையினரும் இணைந்து கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் பள்ளி மாணவர் எமதர்மன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு

திருச்சுழியில் எமதர்மராஜா மூலம் கொேரானா விழிப்புணர்வு பிரச்சாரம்


திருச்சுழியில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் வருவாய்த் துறையினரும் இணைந்து கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் பள்ளி மாணவர் எமதர்மன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. 


எமதர்மன் விழிப்புணர்வை துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


எமதர்ம ராஜா மூலம் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் அணிவித்து, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. 
இதில் திருச்சுழி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள் கதிரேசன், அண்ணாத்துரை, கனகராஜ் மற்றும் தலையாரி இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்


திருச்சுழி நகர்ப்பகுதி முழுவதும் எமதர்மன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப் பட்டது. 


எமதர்மன் போன்று வேடமணிந்து மேற்கொள்ளப் பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image