முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு
திருச்சுழி அருகே முத்துராமலிங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, மாங்குளம் ஆகிய கிராமங்களில் கொரோன வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊராட்சி தலைவர் பூமிநாதன் தலைமையில்மஞ்சள், வேப்பிலை, வசம்பு, கோமியம், உப்பு, லைசால், வாசனை திரவியங்களான நோய் தடுப்பு மருந்துக்களை கலந்து வீடுகள் கிராம சாலைகள் முழுவதும் தெளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த நோட்டிஸ் மூலம் வீடு வீடாக வழங்கினார்கள் இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிசெயலர் சரவணன், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்