தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும்


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு  நலத்திட்டங்களை தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும் சேவை செய்தது குறிப்பிடதக்கது.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  23மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி செய்து வருவதை தொடர்ந்து,நாகதேவம் பாளையம், வெள்ளை பெரிச்சி புதூர்(ஊஞ்சகரை )ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000ரூபாய் மற்றும் பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கு. ஜெயந்தி கிருஷ்ணன்,உதவி ஆசிரியர் ஆ. மயில்சாமி  ஆகியோர் மாணவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று வழங்கினார்கள்.இதனை மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பெரிதும் பாராட்டினர்.



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image