வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு. பெரியண்ணன் அரசு M.Sc., அவர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்கள் ,மற்றும் தினக்கூலி பணியாளர்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம், கையுறை மற்றும் சோப்பு போன்றவற்றை வழங்கினார். மேலும் கொரனா நோயினைக் கண்டறியும் பரிசோதனை கூடத்தை பார்வையிட்டார் .உடன் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் செந்தில், நகர கழக செயலாளர் நைனாமுகமது, வர்த்தக அணி துணைச் செயலாளர் அசோக் பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், நகர அவைத்தலைவர் ரெத்தினம் ,மாவட்ட தொமுச செயலாளர் கணபதி ,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தொண்டமான் ஊரணி ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான ரமேஷ் , நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரி, மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்