கொரோனா" நோயில் இருந்து முழுமையாக விடுபட அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் நெல்லை மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வேண்டுகோள்
நெல்லை

     "கொரோனா" நோயில் இருந்து முழுமையாக விடுபட அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ஷில்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

       நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" என்ற கொடிய நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில்  நடந்தது. அப்போது அவர் பேசியதாவது.

     நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" நோயை கட்டுப்படுத்த தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  குறிப்பாக நெல்லை  மாவட்டத்தில் மேலப்பாளையம்,  பேட்டை, கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருவதுடன், அத்தியாவசிப் பொருட்களும் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

     நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" சிகிச்சை எடுத்து வருகிறவர்களில் பலர் பூரண சுகம் பெற்று அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். "கொரோனா" நோயில் இருந்து நெல்லை மாவட்ட மக்கள் பூரண நலம் பெற அனைத்து மக்களும் அரசின் விழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

        கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் மணிஷ் நாரனவரே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image