திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு
திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்ல தரை, மேலேந்தல், புதூர், புதுப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊராட்சி தலைவர் இந்திரா மகாலிங்கம். மஞ்சள், வேப்பிலை, வசம்பு, கோமியம், உப்பு, லைசால், வாசனை திரவியங்கள் ஆகிய 7 வகை நோய் தடுப்பு மருந்துக்களை கலந்து வீடுகள், கிராம சாலைகள் முழுவதும் தெளித்தும், விளிப்புணர்வு ஏற்படுத்த நோட்டிஸ் மூலம் வீடு வீடாக வழங்கினார்கள் இதில் துணைத் தலைவர் ராமு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்லம், முனியராஜ், ஷீலாப்பிரியா, செல்வி, சந்திரன்,ஊராட்சி செயலாளர் பாக்கியம் உட்பட தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்