கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் 50 குழுக்களுக்கு 2.50 லட்சம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம்



கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் 50 குழுக்களுக்கு 2.50 லட்சம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம் கொரோனா இடைக்கால கடன் திட்டத்தின் கீழ்  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி துவக்கி வைத்தார்.இந்த கடன் தொகையானது ஆறு மாதங்களுக்கு பிறகு மாதம் ரூ175வீதம் செலுத்தினால் போதுமானது என தெரிவித்தார்.இது கோபியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கி மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பொலவகாளிபாளைய ம், பொம்ம  நாய்க்கன்பாளையம்,  சந்திராபுரம்,  கடுக்கம்பாளையம் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும்  துப்புரவு பணியாளர்களுக்கு   மருத்துவ காப்பீட்டு,  அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய  மளிகைப் பொருட்கள் மற்றும் தூய்மை பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.மேலும் கோபிசெட்டிபாளையம் அனைத்து அரிசி ஆலைகள் சார்பாக மூன்று டன் அரிசி, 500முட்டைகள் போன்றவற்றை தூய்மை பணியாளர்கள், கூலி தொழிலார்கள், மாற்று திறனாளிகளுக்கு வழங்க அமைச்சரிடம் வழங்கினார்கள். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி,நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்,குணசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கம் வெங்கடாச்சலம்,  பச்சியம்மாள் சண்முகத்தரசு,துணை தலைவர்கள் லட்சுமி காந்தன், ஈஸ்வரி, யூனியன் கவுன்சிலர்கள் இளங்கோ, துளசிமணி பாலுச்சாமி சொசைட்டி தலைவர்கள் சீனிவாசன்,பழனிசாமி,ஊராட்சி செயலாளர்கள் மணிகண்டன், சதீஸ்குமார்,வங்கி மேலாளர் சுமன்,சமுதாய அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி தாலுக்கா அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் ரத்தினசாமி, செயலாளர் சிகாமணி, பொருளாளர் ராம்குமார்,மாவட்ட நிர்வாகிகள் பழனிநாதன்,சந்திரசேகர்,கருப்புசாமி,கோபி தாலுக்கா அரிசி ஆலை செயல் அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image