ஈரோடு கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி

ஈரோடு  கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் உள்ளிட்டோா் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.அதற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் டி.சாந்தி ஆகியோா் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளனா்.


இயக்குநா்.D.சாந்தி

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image