ஈரோடு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ் .தென்னரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 25 லட்சம் வழங்கியுள்ளார்.இந்த தொகைக்கான காசோலையை ஈரோடு மாவட்ட கலெக்டர்அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சி.கதிரவன் இடம் எம்.எல்.ஏ;தென்னரசு வழங்கினார்.
எம்எல்ஏ கே.எஸ் .தென்னரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 25 லட்சம் வழங்கியுள்ளார்.