சேலம் 144 தடை உத்தரவை முழுமையாக கடைபிடிப்பதாலும் துப்புரவு பணியாளர்களின் உழைப்பாலும் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த உத்தரமசோழபுரம் கிராமம்



சேலம்

 

144 தடை உத்தரவை முழுமையாக கடைபிடிப்பதாலும் துப்புரவு பணியாளர்களின் உழைப்பாலும் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த உத்தரமசோழபுரம் கிராமம்.

 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூடும் பகுதிகள் மற்றும் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி மற்றும் வீரபாண்டி ஒன்றிய பெருந்தலைவர் வரதராஜ் ஆணைக்கிணங்க உத்தமசோழபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் சேலம் அருகே வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 144 தடை உத்தரவை முழுமையாக கடைப்பிடிப்பதாலும் துப்புரவு பணியாளர்களின் தன்னலமற்ற உழைப்பாலும் நோய் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர்.  இதுகுறித்து  அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் கூறுகையில் மக்களுக்காக  நாங்கள் பணியாற்றுகிறோம் எங்களுக்காக அனைவரும் அரசின் உத்தரவை ஏற்று வீட்டினுள்ளேயே இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதாகவும் தெரிவித்தனர். மேலும் உத்தமசோழபுரம் பஞ்சாயத்து தலைவர் பெருமாள் கூறுகையில், தங்கள் கிராமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும் 144 தடை உத்தரவை மக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிப்பதாலும், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற சேவையாலும் தங்கள் பகுதியில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அவர் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும்  பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி யாரும் தூய்மைப் பணியில் ஈடுபட கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image