கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

 

 

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நிவாரணத்திற்காக நாடெங்கிலும் பல நிறுவனங்கள், மற்றும் அமைப்புகள் நிதியுதவியும் பொருள் உதவியும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில், கொரோனோ நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியர்  கு.ராசாமணி யிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி கூறுகையில்...

கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 900த்திற்க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு நோய்எதிர்ப்பு முழு உடல் கவசம் மற்றும் ஆயிரத்து 200 லிட்டர் கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது. கொரோனோ நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.மேலும் கொரோனா சிகிச்சைக்காக தங்களின் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் 128 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் பிரத்தியேகமாக சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது எனவும், இந்த சிறப்பு மருத்துவமனைக்கான நுழைவாயில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ளது என நல்லா.ஜி.பழனிசாமி தெரிவித்தார்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image