ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை ஊராட்சியில் பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி மன்றத்தலைவர் வீடு வீடாக சென்று முகம் கவசம் வழங்கினார். இதனால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று
உலகமெங்கும் தீவிரமாக பரவி வரும் சூழலில் மத்திய - மாநில அரசுகள், பொதுமக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலன் கருதி
ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து
அமுலில் உள்ளது. இதனடிப்படையில் தமிழகத்திலும் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க அரசு பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக ,உபதலைவர் மற்றும்
அனைத்து வார்டு உறுப்பினர்
களும் இணைந்து வீடு வீடாக சென்று
வீட்டிற்கு இரண்டு வீதம் இரண்டாயிரம் முக கவசங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சமூகநல பிரிவு தாசில்தார் குணசேகரன் முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். ராஜதானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் ராஜக்காபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதா ஜெயக்குமார் தலைமையில் ராஜக்காபட்டி, அழகாபுரி ,காலனி உள்ளிட்ட பகுதிகளில் கொரானா வைரஸ் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க வீடு வீடாகச் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும் ஒவ்வொரு வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.