நரிக்குடி மற்றும் வீர சோழன் கிராமசாலைகளில் தீயணைக்கும் வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிப்பு




நரிக்குடி மற்றும் வீர சோழன் கிராமசாலைகளில் தீயணைக்கும் வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிப்பு


கொரோனாடு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது பல பகுதிகளில் விழிப்புணர்வு பணிகள் உள்ளிட்டவைகள் முழு வீச்சில் நடைபெற்றது இந்நிலையில் நரிக்குடி மற்றும் வீரசோழன் கிராமங்களில் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது. இதை பயன்படுத்தி நரிக்குடி மற்றும் வீர சோழன்ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை நரிக்குடி மற்றும் வீர சோழன் ஊராட்சியும், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இணைந்து தீயணைப்பு வாகனத்தில் 4500 ஆயிரம் தண்ணீரில் டெட்டால், லைசால், பினாயில், வேப்பெண்ணெய் ,மஞ்சள் பொடி பவுடர் ஆகியவற்றை மூன்று தடவையாக கலந்து 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் கலந்து வீர சோழன் ஊராட்சி உட் பட்ட ஒட்டங்குளம்கிராமம் உட்பட நரிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம், யூனியன்அலுவலகம் மற்றும் நரிக்குடி - பார்த்திபனூர் சாலை உட்பட்ட சாலைகளில் கிரிமி நாசினியை தெளித்து சாலைகளை முழுமையாக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இந்த வகையில் நகரின் அனைத்து தெருக்கள் சாலைகளில் முழுமையாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது இதில்  நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், மல்லிகா , நரிக்குடி ஊராட்சி தலைவர் முத்துமாரி காளிஸ்வரன், துணைத் தலைவர் ஜவஹர் வெங்கடேச பாண்டியன், மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் கவிதா,வீர சோழன் ஊராட்சி தலைவர் முகம்மது சாதிக்அலி, துணைத் தலைவர் செய்ய துமுகம்மது சேட், ஊராட்சி செயலர் ராஜசேகர பாண்டியன்,தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமுத்து, முன்னனி தீயணைப்போர் சந்திரசேகர், முனிஸ்வரன் மற்றும் நிலைய தீயணைப்போர் உட்பட பலர் கலந்து கொண்டனர்




 


 

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image