தமிழக முதலமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் நலனின் கருத்தில் கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள்



தமிழக முதலமைச்சர்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்  பொதுமக்களின் நலனின் கருத்தில் கொண்டு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் 

 

கீழ்கண்ட உத்தரவுகள்.29.3.2020 ஞாயிற்று கிழமை முதல்  நடைமுறைக்கு வந்தது

 

1. கோயம்பேடு போன்ற  மாநிலத்தின் மொத்த காய்கறி பல அங்கன்வாடிகளுக்கு மாநிலத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.

 

2. கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் மாலித்தில் உள்ள பிற காய்கறி விற்பனை கடைகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் திறந்து இருக்க வேண்டும்.

 

3. மருந்தகங்கள் உணவகங்கள் பார்சல் மட்டும் நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

 

4. பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 30 மணி வரை மட்டுமே செயல்படும் எனினும் அரசு வாகனங்கள் 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்தி களுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்.

 

5. வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர் சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர் நலன் கருதி SWiggy, Zomato, Uber eats , போன்ற நிறுவனங்கள் மூலம் காலை 7 மணி முதல் 9.30 வரை காலை சிற்றுண்டியும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 .30 மணி வரை மதிய உணவும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவும் எடுத்துச் சென்று சிறப்பினமாக அனுமதிக்கப்படுகிறது.

 

6. 15.02 .2020 க்கு பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் தங்களை தானே கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் பொதுமக்களும் இந்நோய்ப் பரவலின் தீவரத்தை உணர்ந்து மாண்புமிகு தமழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ள  படுகிறார்கள்

என்று , வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வெளியிட்டனர்




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image