சேலம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்து சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக பொதுமக்கள் கைகழுவ கிருமிநாசினி-தண்ணீர் வசதி
சேலம்

மின்னாம்பள்ளி பஞ்சாயத்து சார்பில்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக

பொதுமக்கள் கைகழுவ கிருமிநாசினி-தண்ணீர் வசதி

சேலம் 

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம்  ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆவரணம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஊராட்சிக்குட்பட்ட செல்லியம்பாளையம் மின்னாம்பள்ளி பொன்மலை நகர் மற்றும் சிவலிங்கபுரம் திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பஸ்  நிறுத்தம் மற்றும் சந்தை பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களின் நலன் கருதி பொது இடத்தில் கைகழுவ வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் கிருமினாசினியும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரும் இங்கு கையை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் ஆவரணம் கூறுகையில் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரமாக இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் காய்ச்சல் சளி இருமலால் பாதிக்கப்பட்டவர்களுகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தற்போது தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள் மூலம் பஞ்சாயத்து முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image