ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சி ஆகிய பகுதிகளில்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சி  ஆகிய பகுதிகளில் சிறுவலூர் வட்டார  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை வழங்கினார்.பின்னர் லாரிகள் மூலம் மஞ்சள் கலந்த கிருமி நாசினி அனைத்து இடங்களிலும் தெளிக்கபட்டது.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,  கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார்,  இளநிலை உதவியாளர் காசிலிங்கம்,  ஊராட்சி மன்ற தலைவர்,  சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,  ஊராட்சி கழகச் செயலாளர் அண்ணாதுரை,  யூனியன் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஆப்பிள் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது எனவும், 

மளிகைக்கடை மற்றும் பெட்ரோல் பங்க் செயல்படும்  நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள்  வெளியே செல்லாமலும் அரசின் அறிவிப்புகள் அறிந்து  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image