சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முன்னாள் இராணுவ வீரர் பதவியேற்பு

சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முன்னாள் இராணுவ வீரர் பதவியேற்பு.          மதுரையில் ஊரக, உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.இதில் சேடபட்டி சின்னக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் இராணுவ வீரர் ராமர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 2119மொத்த வாக்குகளில் 575வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான பதவியேற்பு விழாவில் அவருக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இவர் 1977ஆம் வருடம் இராணுவத்தில் சேர்ந்து 2005ம் வருடம் பணிபுரிந்தும்,நாயக்கா க பதவி வகித்து 24வருடம் நாட்டிற்காக சேவை செய்து பணி ஓய்வு பெற்றவர்.இவர் அஸ்ஸாம்,ராஜஸ்தான்,டெல்லி ஆகிய பகுதிகளில் பணி புரிந்தவர்.உடல் தகுதிக்கான தேர்வில் பி.டி விருது பெற்றவர்.இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும்,செல்லமுத்து என்ற மகனும்,செல்வி என்ற மகளும் உள்ளனர்.இவருடன் 1வது வார்டு செல்லதேவன்,2வது வார்டு லெட்சுமி,3வது வார்டு முத்தையா,4வது வார்டு அழகர்,5வது வார்டு திருமணி,6வது வார்டு செந்தில் ஆகியோர் உறுப்பினராக பதவியேற்று கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image