திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தேர்தலில் R . உஷா ஜெயக்குமார் ஜேகே அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்


திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தேர்தலில் R . உஷா ஜெயக்குமார் ஜேகே அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார் . ஜேகே  என்பவர்  முன்னாள் முதலமைச்சர்  பக்தவச்சலம்  அவர்களின்  பேரன் ஆவார் .மொத்தம் 4521 வாக்குகள் பதிவாகின .இதில் 1519 வாக்குகள் அவர் பெற்றிருந்தார். 150 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அதிவிரைவில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். தண்ணீர் வசதி 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப்லைனை முதலில் மாற்றி சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். தரமான சாலை வசதி செய்து தரப்படும் .அரசு பொது மருத்துவமனையில் தரப்படுகின்ற மருந்துகளைப் போல் இங்கு மருத்துவர் வைத்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்படும் .இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும். நிரந்தரமான ஆம்புலன்ஸ் வசதி இங்கு ஏற்படுத்தப்படும் .வல்லூர் மின் நிலையத்திற்கு நிலம்  கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மின்சாரத் துறையில் பேசி வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும். வேலைக்கு வெளியே செல்பவர்களுக்கு இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். நூலகத்தை பராமரித்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் டிஜிட்டல் முறையில் நூலகம் அமைத்து மாணவர்கள் பயன்படுத்த எண்ணற்ற தகவல்களை பெற செய்து கொடுக்கப்படும் .இந்த ஊராட்சியில் பல நல்ல மாற்றங்களை செய்து மாதிரி ஊராட்சியாக உருவாக்குவேன் எனக் கூறினார்



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image