திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், கொண்டக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ. மனோகரன் வெற்றி பெற்றார் .கொண்டகரை ஊராட்சியில் மொத்தம் 1705 வாக்குகள் பதிவாயின .அதில் வெற்றி பெற்ற மனோகரன் அவர்கள் 1011 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவர் மற்றவர்களைவிட 711 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் நான் தேர்தல் வாக்குறுதிகளாக கூறியவற்றில் ,முதல் கட்டமாக ஆரோ பிளான்ட் ஒன்று ஊருக்கு அமைத்துக் கொடுத்து மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கச் செய்வேன் .குதிமேடு ஸ்கூல் மையத்தில் ஷேர் ஆட்டோ ஏற்படுத்தப்படும். வசதியில்லாத மகளிருக்கு தையல் மிஷின் கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி செய்யப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு கொண்டகரை ஊராட்சிக்குட்பட்ட தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் ,போன்ற திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என கூறினார் .மக்களுக்கு பலநல்ல திட்டங்கள் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
கொண்டக்கரை ஊராட்சியை எந்த குறைபாடும் இல்லாத ஊராட்சியாக மாற்றுவேன் எனக் கூறினார்.