சேலம்,
சேலத்தில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் மேக்னசைட் வெள்ளைக்கல் சுரங்கங்களை திறக்க கோரியும், மேக்னசைட் இறக்குமதியை தடை செய்ய வலியுறுத்தி சுரங்க தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் கடந்த 2017 ம் ஆண்டுகளில் 1,800 ஏக்கர் பரப்பளவில் மேக்னசைட் கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை விதிமுறைக்கு மாறாக உரிய புதுப்பித்தல் உரிமம் இன்றி செயல்பட்டதால் இச்சுரங்கங்கள் மூடப்பட்டன. இதானல் சுரங்கங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்த 1500 க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று வருடங்களாக வேலையிழந்து தவிப்பதால் சுரங்கங்களை திறக்க கோரியும், மேக்னசைட் இறக்குமதிக்கு தடை விதித்து வெள்ளைக்கற்களை வெட்டி எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுரங்கங்களை திறக்க சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்