சேலம், சேலத்தில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் மேக்னசைட் வெள்ளைக்கல் சுரங்கங்களை திறக்க கோரியும்
சேலம்,

சேலத்தில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் மேக்னசைட் வெள்ளைக்கல்  சுரங்கங்களை திறக்க கோரியும், மேக்னசைட் இறக்குமதியை தடை செய்ய வலியுறுத்தி சுரங்க தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் கடந்த 2017 ம் ஆண்டுகளில் 1,800 ஏக்கர் பரப்பளவில் மேக்னசைட் கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை விதிமுறைக்கு மாறாக உரிய புதுப்பித்தல் உரிமம் இன்றி செயல்பட்டதால் இச்சுரங்கங்கள் மூடப்பட்டன. இதானல் சுரங்கங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்த 1500 க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று வருடங்களாக வேலையிழந்து தவிப்பதால் சுரங்கங்களை திறக்க கோரியும், மேக்னசைட் இறக்குமதிக்கு தடை விதித்து வெள்ளைக்கற்களை வெட்டி எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 200 க்கும் மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுரங்கங்களை திறக்க சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image