சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவராக அஜித்பாண்டி பதவியேற்பு.
சீமானூத்து  ஊராட்சி மன்ற தலைவராக அஜித்பாண்டி பதவியேற்பு.

மதுரை மாவட்டத்தில் கடந்த 27,30ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக,உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி ஒன்றியம் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவராக அஜித்பாண்டி அவர்கள் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு 2477 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.இந்நிலையில் அவர் முன்னாள் மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி அவர்களை சந்தித்து ஆசி பெற்ற பின் பதவியேற்றார் பின்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி கூறுகையில்:-

என்னை சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெறச் செய்த  வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் அடிப்படை தேவைகளான தெருவிளக்கு,குடிநீர் வசதி,சாலைவசதி, பேருந்து நிறுத்தம்,பயணியர் நிழற்குடை, மயான வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இது சம்பந்தமான குறைகளுக்கு உடனடி  தீர்வு காணப்படும். மேலும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு ஊராட்சி மன்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டும், என்னுடைய கவனத்திற்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சீமானூத்து ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற அரும்பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார். உடன் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உடன் இருத்தார்.

Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image