ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்


ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன ஊர்வலம்
      தூத்துக்குடி
      மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்  மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு துவங்கிய மெளன அஞ்சலி ஊர்வலம் நகரின் முக்கிய வீதியின் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகத்தை வந்ததடைந்தது. பின்னர் அங்கே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
      இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி தியாகராஜ் நட்டர்ஜி முன்னிலை வகித்தார்.
      இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வீ.ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், அதிமுக நிர்வாகிகள் அமிர்தகணேசன், ஏசாதுரை, ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image