தமாகா நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம்.
விருதுநகர் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜபாண்டியனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.
விருதுநகர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாவட்ட தலைவர் ராஜபாண்டியனிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மேலிடப் பார்வையாளர்கள் ஐ.சிலுவை, இரா.மணி ,மாநில செயலாளர் க.பாலசுப்பிரமணியம் உட்பட கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜிகே வாசன் அறிவித்தபடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ரூபாய் இரண்டாயிரமும் ,ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ரூபாய்.ஆயிரமும் விண்ணப்பக் கட்டணமாக பெறப்பட்டது. இதில் ,ஆதிதிராவிடர் மற்றும் மகளிர்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிக்குப்படுவதாக மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் கூறினார்.மேலும்,கூறுகையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இடம் பெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சியை ஏற்படுத்த ,தமாகா நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றி அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.உள்ளாட்சித்தேர்தலில் , எந்தெந்த பதவிக்கான இடங்களில் போட்டியிடுவது என்பதை கூட்டணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி தமாகா அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பினை பெறுவோம் என்றும் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.