சேலம் அமைச்சூர் ஆர்ட்ஸ், தமிழ்நாடு பிராமணர் சங்கம், சந்திரசேகர கமலம் பவுண்டேஷன் சார்பில்
சேலம் அமைச்சூர் ஆர்ட்ஸ், தமிழ்நாடு பிராமணர் சங்கம், சந்திரசேகர கமலம் பவுண்டேஷன் சார்பில்,  தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற 

5 கலைஞர்களுக்கு, சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

 

விருது பெற்ற கலைஞர்களை ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கி கவுரவித்தார். கே.கே.ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ராசிசரவணன் தலைமை உரையாற்றினார். தாரை குமரவேல், ஸ்ரீராமன்,  ரமணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏ.,  கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.  கலைமாமணி விருது பெற்ற குரலிசை கலைஞர் மகாராஜபுரம் ராமச்சந்திரன்,  எழுத்தாளர்கள் கு.கணேசன், நாட்டியக் கலைஞர் பாண்டியன், புல்லாங்குழல் 

கலைஞர் ரவிச்சந்திரமோகன், மிருதங்க வித்வான் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். 

 

நிகழ்ச்சியில், சேலம் வித்யாவாணி வித்யாலயா மாணவர்களின்  குரலிசை பாட்டும்,  கலைஇளமணி கிருத்திகா சரவணன் நாட்டிய நிகழ்ச்சியும், கலைமாமணி ராமச்சந்திரன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரசு இசைப் பள்ளி முதல்வர் சங்கரராமன் விழாவினை  ஒருங்கிணைத்து வழங்கினார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image