கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில்

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேகேம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1963 ஆம் ஆண்டு இறந்த போது வள்ளநாட்டு சித்தர் தேவரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்தார்.  இதனை முன்னிட்டு  ஒவ்ùôரு ஆண்டும் தேவர் இறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்மீக துறவிகள் பசும்பொன்னுக்கு வந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வருகின்றனர். நிகழாண்டில் அகில இந்திய துறவியர் பேரவை தலைவர் ராமனந்தா மகரிஷி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் முத்துராமலிங்கத்தேவருக்கு பால், எண்ணை, திருநீறு, பஞ்சாமிர்தம், நெய், உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் தாமிரபரணி முதல் கங்கை வரை உள்ள புன்னிய நதிகளின் தீர்தங்கள் மூலமாக அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் புறநானூறு பாடல்கள், முருக கடவுளின் கீர்த்தனைகளை பாடி இந்து சாஸ்திர ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் துறவிகள் மட்டுமின்றி  பா.ஜ.க வணிக பிரிவு மாநில துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, ராமநாதபுரம் ஞான தீப சேவா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், சாரதா சேவா சமீதி சங்கம் கஸ்தூரிபாய், விஜயராணி, குபேந்திரா கேசவன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பால்ராஜ், ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் மயில்மணிபாண்டியன், மாநில பூசாரிகள் சங்கத் தலைவர் முனியப்பகுமார்,  மாநில வர்த்தக அணி துணை தலைவர் முருகன்ஜி, இளைஞரணி செயலாளர் ஜெகதீசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தர்மராஜ், இந்து முன்னனி பரமக்குடி பொறுப்பாளர் திருமுருகன், மதுரை வடடக்கு பகுதி அதிமுக  நிர்வாகிகள்,  மதுரை தேவர் பேரவை , மதுரை முக்குலோத்தோர் வளர்ச்சி இயக்கம், அனைத்து மறவர் கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image