நரிக்குடியில் வீரசோழனில்

வீரசோழனில்  மீலாது முப்பெரும் விழா


 

நரிக்குடி ,டிச-10

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழனில் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் 12 நாட்கள் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு 

நடைபெற்றது. மேலும், மீலாது ஊர்வலம் பெரிய பள்ளிவாசல் தொடங்கி ஈத்கா திடல், சந்தை கடை, பாவோடி வீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் போர்டு தலைவர் அம்பா அஹமது முஸ்தபா தலைமை தாங்கி கொடியசைத்து மீலாது ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அரபிக் கல்லூரியின் முதல்வர் அப்துல் காதர் பாக்கவி மீலாது கொடியை ஏற்றி வைத்தார்.

டிசம்பர் 24 அன்று மீலாது கந்தூரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும் என இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்சுழி  டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.  ஜமாத் கணக்கு அலுவலர்  அகமது அப்துல் காதர் நன்றி கூறினார்.நிர்வாக டிரஸ்டி முகமதுமீரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image