கோவை இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி
கோவை


 


இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் சக்திசேனா அமைப்பினர் சார்பாக புகார் மனு அளித்தனர்.

 

கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் இந்து மக்கள் இயக்கத்தின் சக்தி சேனா சார்பாக மனு அளிக்கப்பட்டது.மனுவில் சமீபத்தில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த மகளிரணி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் , இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், இந்த கருத்து இந்து மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது இந்த செயல் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சேனாவின் தெய்வீக பேரவை தலைவர் வினோத்கண்ணன்   பேசுகையில் திருமாவளவன் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் இது போன்று தொடர்ந்து பேசி வருவதாகவும் எனவே ,அவரது கட்சியை தடை செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image