நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 6563 பேருக்கு ரூ.16.77 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித.தலைவர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம் வரவேற்றார்.
விழாவில் 1227 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவினை அமைச்சர் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சப்.கலெக்டர் மணீஸ் நாராயணவரே, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா, மாவட்ட பொருளாளர் சங்கை சண்முகையா, கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவர் வேலுச்சாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் பரமகுருநாதன், பகுதி செயலாளர்கள் மாதவன், ஹயாத், ஜெனி, நாராயணபெருமாள், சுரேஷ், எம்.கே.ராஜா, ராஜேந்திரன், மகளிரணி கே.வேலம்மாள், திவ்யா யாதவ், முத்துலெட்சுமி, சிபா.முருகன், சிறுமளஞ்சி சிவா,உள்பட பலர் கலந்து கொணடனர்.
நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 6563 பேருக்கு ரூ.16.77 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்