உள்ளாட்சி தேர்தலில் அமமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
நெல்லை,நவ.12
நெல்லை மாநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பால்கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 18ந் தேதி வ.உ.சி. குருபூஜை விழாவிற்கு அவரது நினைவு இல்லத்திற்கு வருகை தரும் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேரவை செயலாளர் சுரேஷ்குமார், ஆவின் அண்ணாச்சாமி, தாழை மீரான்,மேலநீலிதநல்லூர் அமிதாப், பகுதி செயலாளர்கள் பேச்சிமுத்து, பாளை ரமேஷ், ஹைதர் அலி, ஸ்டார், அய்யப்பன், மற்றும் வக்கீல் மணிகண்டன், மணிமூர்த்திஸ்வரம் ஆறுமுகம், ராம்சன் உமா, முத்துலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர் முருகன், சிவணைந்த பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நெல்லை மாநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்