நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜலெட்சுமி கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களுக்கு தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. அதே போல் புறநகர் மாவட்ட சேவியர் காலனி அலுவலகத்தில் வைத்து அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் எம்.பி. விஜிலாசத்தியானந்த், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், பொருளாளர் சண்முகையா, விவசாய அணி மாவட்ட செயலாளர் பரமகுருநாதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜ், சவுந்தர் என்ற சாகுல், பகுதி செயலாளர்கள் மாதவன், மோகன், ஹயாத், ஜெனி நிர்வாகிகள் சண்முக சுந்தரம், ராஜேந்திரன், முன்னாள் பகுதி செயலாளர் சந்திரசேகர், எம்.கே.ராஜா, திருத்து சின்னத்துரை, ஏ.எஸ்.சங்கர், குருசாமி, டீ கேன் பக்கீர் முகைதீன், வக்கீல் விடி.திருமலையப்பன், ராஜபிரபாகரன், லெட்சுமணன் என்ற ரமேஷ், வி.கே.பி.சங்கர், கணபதி சுந்தரம், மகளிரணி ஸ்வர்ணா, புவனேஷ்வரி, ஸ்டெல்லா மதன், ராமு வெங்கடாசலம், திவ்யா யாதவ், ரவி ஆறுமுகம், பி.எஸ்.கணேசபாண்டியன், ஒன்றிய செயலாளர் கங்கை முருகன், லெட்சுமணன், மேலநீலிதநல்லூர் வேல்முருகன், ஆட்கொண்டார்குளம் முருகன், கிளாசிக் பாரத், குட்டி, சுரேஷ், சேக் மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜலெட்சுமி