சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற லாபநோக்கற்ற சேவை
சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது. 

 

 மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி  முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராமின் அற்புதமான இசைக்கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது , உயிரோட்டமுள்ளதாக மாறியது . சேவையாற்ற வேண்டுமென்ற ஒரே பொறுப்புறுதியைக் கொண்டிருக்கும் மைத்ரி . வயது முதிர்ந்த நபர்களுக்கான ஆதரவு மற்றும் நிதிக்காக பொதுமக்களின் விழிப்புணர்வைச் சார்ந்து செயலாற்றி வருகிறது . 

 

 வசதியற்ற , வயது முதிர்ந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும் , அவர்களின் மனக்காயங்களை குணமாக்குவதிலும் மிகச்சிறப்பான பணியை நான்கு ஆண்டுகள் செய்ததற்குப் பிறகு , 2020 ஆம் ஆண்டுக்குள் 1 , 00 , 000  (ஒரு இலட்சம் ) ஆதரவற்ற முதியோர்களை அக்கறையுடன் கவனித்து அவர்களுக்கு சேவை வழங்க ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் உறுதி பூண்டிருக்கிறது .

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image