திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்

திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக, வளரிளம் பெண்கள் மற்றும் இளம் தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார். ஓடம் நிறுவனத்தின் செயலர் வசந்தா முன்னிலை வகித்தார். மிதிலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மிதிலைக்குளம் கிராம வருவாய் ஆய்வாளர் ராதிகா, புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலர் குரு சரண் மற்றும் மிதிலைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் கோட்டை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மிதிலைக்குளம் ஊராட்சியின் செயலர் பிச்சை வரவேற்புரையாற்றினார் தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி சமுக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை மக்கள் பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியை ஓடம் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அரவிந்த் ராஜ் மற்றும் ஓடம் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image